×

சேரம்பாடியில் மகளிர் உரிமை, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி சமுதாய கூடத்தில் மகளிர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமுக நலத்துறை நல திட்ட அலுவலர் லீலா தலைமை தாங்கினார். சேரங்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் பார்வதி முன்னிலை வகித்தார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது‘மகளிர் நலனில் அதிகம் பாதிப்பது ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பெண்களுக்கு அதிக அளவில் நோய்கள் தாக்கி வருகிறது. துரித உணவுகள், சுவையூட்டிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் ஆளாகும் சூழல் உருவாகிறது. ரேஷன் அரிசி, உப்பு பயன்படுத்த வேண்டும்.

மகளிர் உதவி மைய பொறுப்பாளர்கள் வளர்மதி, தீப்தி ஆகியோர் பேசும்போது,‘ மகளிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற மகளிர் பாதுகாப்பு மையம் செயல்படுகிறது. குடும்ப பிரச்னைகள், மற்றும் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்கள் 181 என்கிற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அவர்களுக்கு தங்குவதற்கு உதவிகள் செய்து தரப்படும்’ என்றனர். ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் அதற்கான தவிர்ப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் சிறு குழந்தைகள் திருமணம் செய்வது போக்சோ சட்டபடி தண்டனைக்குரிய குற்றம்’ என்றார். சேரங்கோடு ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சேரம்பாடியில் மகளிர் உரிமை, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Cherambadi ,Bandalur ,Cherambadi Community Hall ,
× RELATED பந்தலூர் கருமாரியம்மன் கோவில்...